"அன்புமணியை ஆணையம் அங்கீகரிக்கவில்லை" என ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் அருள் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இன்று (பிப்.9) கூறியதாவது, “போலி ஆவணங்களை உருவாக்கி அதை வழங்கி, தாம்தான் தலைவர் என்று அன்புமணி கூறிவருகிறார். காலாவதியான ஆவணங்களை வைத்து ஆணையத்தில் அளித்து தலைவர் என நிறுவப்பார்க்கின்றனர். பாமகவின் மாம்பழச் சின்னம் முடக்கப்படலாம். அன்புமணியை தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.