சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு இன்றுடன் (மே.27) முடிவுக்கு வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு பின் இபிஎஸ்-க்கு எதிராக வேலுமணி தரப்பு போர்க்கொடி தூக்கிய நிலையில், இரு தரப்பினரும் இன்று ஒன்றிணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு நடந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பும் ஒன்றிணைந்து செயல்பட ஒத்து கொண்டதாக கூறப்படுகிறது. இருதரப்பும், சபாநாயகரிடம் அளித்த புகார் மனுக்களை திரும்ப பெற திட்டமிட்டுள்ளனர்.