தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை’ இன்று (ஜூன் 9) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சிறப்பு படை, எவ்வித தாமதமும் இன்றி விரைந்து செயல்படுவதற்காக முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண் காவலர்களின் திறமை ஊக்கவிக்கப்படுவதோடு, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.