செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாட்டிற்காக மிகப்பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தொடக்க மாநாட்டை தொடர்ந்து பிப்.14-ல் திருப்பத்தூர், 21-ல் மதுரை மற்றும் 27-ல் கோவையிலும் அடுத்தடுத்து மண்டல மாநாடுகள் நடத்தப்பட உள்ளன. தேர்தல் வெற்றியை இலக்காக கொண்டு திட்டமிடப்பட்டுள்ள இந்த மாநாடு, திமுகவின் தேர்தல் பணிகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.