எகிப்து நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த உலகின் மிகப்பெரிய தொல்பொருள் அருங்காட்சியகம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் எகிப்தின் பழங்கால மன்னர்களின் சிலைகள், அந்தக் கால கலாசாரத்தை பிரதிபலிக்கும் கலைப்பொருட்கள். பிரமிடுகள் மற்றும் முக்கிய வரலாற்றுப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அதில் முக்கிய அம்சங்களாக, மன்னர் டுட்டன்காமுன் கல்லறை மற்றும் கிசா பிரமிடின் மாதிரி சிறப்பு காட்சிகளாக அமைந்துள்ளன.