தேனி மாவட்டம் கோம்பைதொழு பகுதியில் பஞ்சாங்க விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதாக கடமலைக்குண்டு போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற மயிலாடும்பாறை போலீசார் அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற ஜெயபிரபு என்பவரை பிடித்து விசாரித்ததில் அவரிடம் 4. 227 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.