தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா உட்பட்ட கடமலைக்குண்டு அருகே சிறப்பாறை பகுதியை சேர்ந்தவர் கர்ணன். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்த நிலையில் அதன் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் கடந்த 18-ஆம் தேதி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.