தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு போலீசார் ரோந்து பணியின்போது, ஓடை அருகே பாண்டியன் (36) என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததை கண்டறிந்தனர். அவரிடமிருந்த 24 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.