தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளர்கள், தங்கள் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதால், சீரமைப்புக்குத் தேவையான மணல், சிமெண்ட், செங்கல் போன்ற கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் விதிக்கும் தடையால் அவதிப்படுகின்றனர். இதனால் வீடுகளை மராமத்து செய்ய முடியாமல் தவிக்கும் பொதுமக்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என எச்சரித்துள்ளனர்.