ஆண்டிப்பட்டி - Andipatti

கம்பம் அருகே சண்முகாநதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சண்முகாநதி அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக வினாடிக்கு 14.4 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. உத்தமபாளையம் கோட்டாச்சியர் செய்யது முஹமது மற்றும் பெரியார் வடிநிலக்கோட்டை தலைமை பொறியாளர் மயில்வாகனன் ஆகியோர் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதன் மூலம் 8 கிராமங்களில் உள்ள 1640 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

வீடியோஸ்


தேனி
Oct 29, 2025, 10:10 IST/

களங்கம் கற்பிக்கும் முயற்சி வெற்றி பெறாது - அமைச்சர் நேரு

Oct 29, 2025, 10:10 IST
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த பணி நியமனங்களில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை (ED) கூறிய புகாருக்கு அமைச்சர் கே.என். நேரு பதிலளித்துள்ளார். அமலாக்கத்துறையின் இந்த குற்றச்சாட்டு, அரசுக்கு ‘களங்கம் கற்பிக்கும் முயற்சி’ என்றும், வேலைவாய்ப்பு குறித்த இந்த தேர்வுகள் நியாயமான முறையிலும், ஒளிவு மறைவற்ற வகையிலும் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன என்றும் விளக்கமளித்துள்ளார். மேலும், இதில் எந்த முறைகேடும் இல்லை என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். நன்றி:NewsTamil