பெரியகுளம் அருகே அனுமார் கோவில் தெருவில் வசிக்கும் அலாவுதீன் குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றிருந்தபோது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பெரியகுளம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.