போடி அருகே கொட்டக்குடி ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்

67பார்த்தது
போடி அருகே கொட்டக்குடி ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்
தேனி மாவட்டம் போடி தொகுதிக்கு உட்பட்ட பூதிப்புரம் பேரூராட்சி பொதுமக்களிடமிருந்து பெறும் குப்பையை பேரூராட்சி நிர்வாகம் கொட்டக்குடி ஆற்றின் கரையோரங்களில் கொட்டி அப்பகுதியை மாசுபடுத்தி வருகிறது. சிலர் இறைச்சி கழிவுகளையும் ஆற்றில் கொட்டுகின்றனர். 

ஆற்றில் அதிக தண்ணீர் வரும் நேரங்களில் இவை அடித்துச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனால் ஆற்று நீர் மாசுபடுவதுடன், அதனை பயன்படுத்தும் பொதுமக்கள், கால்நடைகளும் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.