பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியைச் சேர்ந்த தங்கவேல் (46) என்பவர் நேற்று (ஜூன் 2) சாலையில் நடந்து சென்றபோது,
பிரபு ஓட்டி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தங்கவேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.