தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லை பட்டியில் மின் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் பொதுமக்கள் மார்க்கையன்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. சின்னமனூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.