தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் போது கனமழை பெய்து, சூறாவளி காற்று வீசியதில் சாலையோர கடைகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. தகரங்கள் பறந்து பக்தர்கள் மீது விழுந்ததில் 2 பேர் காயமடைந்தனர். திருவிழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த கடைகள் சேதமடைந்ததால் வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.