கம்பம் நகரில் முகைதீன் ஆண்டவர்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கிய நகர்மன்ற தலைவர் தேனி மாவட்டம் கம்பத்தில் அமைந்துள்ள முகைதீன் ஆண்டவர்புரம் அரசு நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் ஜூன் 2அன்று நினைவு பரிசு வழங்கினார். இந்த நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், உறுப்பினர்கள் உடன் இருந்தனர்