தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவம்பர் 5) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இதனால் காமாட்சிபுரம், ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை, வெள்ளையம்மாள்புரம், குப்பிநாயக்கன்பட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, சீலையம்பட்டி, கோட்டூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடைபடும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.