திருவாரூர் மாவட்ட CITU அலுவலகத்திற்குள் புகுந்து நிர்வாகிகளை அத்துமீறி கைது செய்த காவல்துறையை கண்டித்து தேனி மாவட்ட கம்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.