தேனி, கோட்டைக்களம் தெருவில் வசிக்கும் நிதி நிறுவன உரிமையாளர் பாண்டியன் (72) அவரது வீட்டு முன் மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். வனிதா, கார்த்திகா, பிரபாகரன், கர்ணன் ஆகியோருக்கு ரூ. 10 லட்சம் கடன் கொடுத்து, அதற்கு ஈடாக அவர்களின் வீட்டை கிரைய ஒப்பந்தம் செய்திருந்தார் பாண்டியன். வீட்டை கையகப்படுத்த முயன்றபோது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. வனிதா உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.