தேனி அருகே தொழிலாளியின் மண்டை உடைப்பு

81பார்த்தது
தேனி அருகே தொழிலாளியின் மண்டை உடைப்பு
தேனி மாவட்டம், கூடலூர் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகுராசா (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் சம்பவ தினத்தன்று அல்லிநகரம் பெரியார் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். 

அங்கு மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்த ஈஸ்வரன் என்பவருக்கும் அழகுராசாவுக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், ஈஸ்வரன் இரும்பு கம்பியால் அழகுராசாவின் மண்டையை உடைத்துள்ளார். இதனால், படுகாயம் அடைந்த அழகுராசா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அல்லிநகரம் போலீசார் ஈஸ்வரனை தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you