விசிக தலைவர் திருமாவளவன் சமீபத்தில் அளித்த பேட்டியில், “தவெக ஆதவ் அர்ஜுனாவிடம் ஆதரவு கடிதம் கொடுத்துவிட்டு, சுமார் 4.45 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க சென்றேன். அப்போது எனக்கு ஒரு தரப்பில் இருந்து முக்கிய நபர் போன் செய்து, ‘ஆதரவு கடிதம் கொடுத்திருந்தாலும், செய்தியாளர்களைச் சந்திக்காதீர்கள். உங்களை முதலமைச்சராக அறிவிக்கப்போகிறேன்' எனச் சொன்னார்கள். நான் வேண்டாம் நாங்கள் ஆதரவு கடிதம் கொடுத்துவிட்டோம் என்றேன்” என தெரிவித்துள்ளார்.