திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.100 கட்டண சிறப்பு தரிசனத்தில் போலியான ரசீதுகள் கொடுத்து பெண் ஊழியர் மேனகா, பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் நடத்திய விசாரணையில், மேனகா பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. முதற்கட்ட நடவடிக்கையாக, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ.25 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.