
திருப்பரங்குன்றம் மலையில் தொல்லியல்துறை சார்ந்த 7 பேர் கொண்ட குழு ஆய்வு
மதுரை திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தூணை, தொல்லியல்துறை சார்ந்த 7 பேர் கொண்ட குழு இன்று (டிச.10) ஆய்வு செய்துள்ளது. இந்த தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற கோரிய மேல்முறையீட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. காலை 8.45 மணிக்கு தொடங்கிய ஆய்வு சுமார் 3 மணி நேரம் நீடித்தது. ஆய்வுக்கு தேவையான தரவுகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.































