அம்பை அருகே செட்டிமேடு கிராமத்தில் மாரிமுத்து மற்றும் செல்வின் இடையே நிலப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் மாரிமுத்து, அவரது மகன் நதீஷ் (20), மகள்கள் நதியா (15), செலிசியா (13) மற்றும் மாமியார் ஆவுடையம்மாள் என 5 பேர் மண்வெட்டியால் வெட்டப்பட்டனர். இது குறித்து போலீஸ் இன்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.