நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை திடீரென கனமழை கொட்டியது. குறிப்பாக, கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தபோது, ஒரு பனைமரத்தில் மின்னல் தாக்கி அதன் ஓலைகள் தீப்பற்றி எரிந்தன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.