பணகுடி அருகே பெருங்காளியாபுரம் பகுதியில் நேற்று 60 வயது மூதாட்டி ஒருவரை மர்ம நபர் ஒருவர் வன்புணர்வு செய்து அவரைத் தாக்கி இரண்டு பவுன் தங்க நகையை பறித்து சென்றுள்ளார். இது குறித்து எஸ்பி சிலம்பரசன் நேரில் விசாரணை மேற்கொண்ட நிலையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் தனிப்படை போலீசார் மூதாட்டியிடம் நகை பறித்த நபரை இன்று அதிரடியாக கைது செய்தனர். ஆனால் குற்றவாளி பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.