முக்கூடலில் கஞ்சா வைத்திருந்த வடமாநில நபர் கைது

1பார்த்தது
முக்கூடல் போலீசார் வடக்கு அரியநாயகிபுரம் ஆற்றங்கரை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் மர்ஜி (28) என்பவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றதைக் கண்டனர். அவரை சோதனை செய்ததில், அரசால் தடை செய்யப்பட்ட 2 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக அவர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, NDPS சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஹேமந்த் மர்ஜியை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி