முக்கூடல் அருகே சிவகாமிபுரம் காந்தி தெருவை சேர்ந்த நிராஜ்(31) என்பவர், நேற்று முன்தினம் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு மொட்டை மாடியில் தூங்கியுள்ளார். அதிகாலை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.