நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்ற தவெகவைச் சேர்ந்த ரெட்டியார்பட்டி நாராயணன், தனது சொந்த ஊரான களக்காடு பகுதிக்கு வந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் அவரிடம் பல்வேறு குறைகளை தெரிவித்தனர். அந்த குறைகளை கேட்டறிந்த அவர், அவற்றை நேரில் ஆய்வு செய்தார். தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்ற அவர் உறுதியளித்தார்.