ஏர்வாடியில் போதை பொருள் வைத்திருந்த வாலிபர் கைது

ஏர்வாடி காவல்துறையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த மாரீசன் (23) என்பவரை சோதனை செய்தனர். அவரிடம் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட 5 கிலோ 625 கிராம் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினர் மாரீசனை கைது செய்தனர்.