நெல்லை: 50 பெண்களிடம்...உல்லாசமாக சுற்றிய வாலிபர்

திருநெல்வேலியைச் சேர்ந்த சூர்யா (28) என்பவர், திருமண தகவல் இணையதளம் மூலம் பெண்களை குறிவைத்து, தான் ஒரு தொழில் அதிபர் என கூறி அவர்களை ஏமாற்றி வந்துள்ளார். சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் சூர்யாவை கைது செய்தனர். விசாரணையில், அவர் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களிடம் இருந்து நகை, பணம் பறித்து உல்லாசமாக சுற்றி வந்தது தெரியவந்துள்ளது.
