திருநெல்வேலி மாவட்ட காவல்துறை குற்ற செயல்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் ஒரு ரவுடி மற்றும் போக்சோ குற்றவாளி உட்பட மேலும் இருவர் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என எஸ்.பி. சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.