திருநெல்வேலி பேட்டை கிழக்கு பகுதி 24வது வார்டு டவுன் குற்றாலம் சாலையில் உள்ள கால்வாயை தூர்வாருவது தொடர்பாக நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் சிவகுமாரிடம் நெல்லை மேற்கு மாநகர திமுக பொறுப்பாளர் சுப்பிரமணியன் மனு அளித்தார். மனு அளிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாய் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.