120 நபர்களுக்கு சான்றிதழ்களை பெற்று கொடுத்த திமுகவினர்

83பார்த்தது
120 நபர்களுக்கு சான்றிதழ்களை பெற்று கொடுத்த திமுகவினர்
நெல்லையில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்தது மட்டுமின்றி தங்களது சான்றிதழ்களையும் பறிகொடுத்தனர். இந்த சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்காக நெல்லை மாநகர திமுக சார்பில் சிறப்பு முகாம் கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த முகாம் மூலம் 120 நபர்களுக்கு சான்றிதழ் கிடைக்க பெற்றுள்ளதாக மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி