நெல்லையில் உள்ள மத்திய அரசின் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு பல நாட்களாக பணம் வழங்கப்படாததால், அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாசலில் தர்ணா
போராட்டம் நடைபெற்றது. தங்கள் பணத்தை பெற்று தரக்கோரி விவசாயிகள் வலியுறுத்தினர்.