தேவர்குளத்தை அடுத்த தடியம்பட்டியில் 17 வயது சிறுமி, வனராஜ் என்பவரை 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார். வனராஜ் குடிபோதையில் மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டதாகவும், சிறுமியின் நடத்தையில் சந்தேகம் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமி நேற்று துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலைப் பார்த்து தாய் கதறி அழுதார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.