கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வண்ணாரப்பேட்டையில் நேற்று (மே 28)
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது
பிரதமர் மோடியின் படத்தை கிழித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் தலையிட்டு உருவப்படத்தை அப்புறப்படுத்தி நிலைமையைச் சீர் செய்தனர்.