நெல்லை மண்டலத்தில் சிஎன்ஜி எரிவாயு தட்டுப்பாடு காரணமாக அரசு பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாளையில் உள்ள தனியார் பெட்ரோல் நிலையங்களில் சிஎன்ஜி நிரப்பப்படும் 28 அரசு பேருந்துகளுக்கு எரிவாயு கிடைக்காததால், அவை இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நேற்றிரவு முதல் இந்த தட்டுப்பாடு நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.