தாழையூத்து காவல் நிலைய சரகத்தில் 2020 ஆம் ஆண்டு வழிப்பறி மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கபாண்டி (28) என்பவர் இன்று கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 3½ மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். தாழையூத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.