நெல்லை மாநகர பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர். தச்சநல்லூர் சாலை அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட தென்காசி அச்சன்புதூரைச் சேர்ந்த முஹமது சைபுல்லா (31) என்பவரிடம் இருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.