மேலப்பாளையத்தில் ஜமால் என்பவருக்குச் சொந்தமான ஒர்க்ஷாப்பில் நேற்று போதையில் வந்த இளைஞர் ஒருவர் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினார். தட்டிக் கேட்ட ஊழியரையும் தாக்கியுள்ளார். போலீசார் எச்சரித்து அனுப்பிய நிலையில், இன்று அதிகாலை மீண்டும் ஜமால் வீட்டுக்கு பெட்ரோலுடன் வந்து தகராறு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.