ரெட்டியார்பட்டியில் மது விற்ற ஒருவர் கைது

மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரெட்டியார்பட்டி விலக்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சட்டவிரோதமாக மதுபானம் விற்றுகொண்டிருந்த சிவந்திபட்டி கார்மேகனார் தெருவை சேர்ந்த உச்சிமாகாளி (37) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 29 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.