நெல்லை மாவட்டம் தாழையூத்து ஸ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் கால்கோல் விழா இன்று (பிப்ரவரி 4) கோலாகலமாக நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயரும் திமுக பிரமுகருமான கே ஆர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரை கோயில் நிர்வாகிகள் வரவேற்றனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களும் இதில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.