பாளை அடுத்த இலந்தைக்குளம் பகுதியைச் சேர்ந்த இசக்கி வடிவு (30) என்பவர், பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த தலைவரின் படம் வைக்கப்பட்ட பீடத்தின் கூரையை வேண்டுமென்றே இடித்துவிட்டு, அதற்குப் பதிலாக கான்கிரீட் கூரை அமைக்க முத்துக்குமார் (23) என்பவரிடம் பணம் கேட்டு அருவாளைக் காட்டி மிரட்டியுள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பெருமாள்புரம் போலீசார் இசக்கி வடிவை இன்று கைது செய்தனர்.