பாளை V. M சத்திரம் அருகே இன்று போலீசார் நடத்திய வாகன சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 5.6 கிலோ கஞ்சாவுடன் பாலாசுப்பிரமணியன் (27), திம்மு ராஜுகுட்டி (28) மற்றும் இசக்கிமுத்து (27) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா மற்றும் அவர்களது பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.