பாளை வி. எம். சத்திரம் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் தனியார் நிறுவனம் விவசாயிகளின் நிலங்களை ஆக்கிரமித்து நில மோசடி செய்வதாகக் கூறி, அரசை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் வண்ணாரப்பேட்டையில் திங்கட்கிழமை தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாலை வரை நீடித்த இந்த போராட்டத்தில், 231 பெண்கள் உட்பட மொத்தம் 276 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.