நெல்லையில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவின் பேரில் தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாளை தாசில்தார் இசைவாணி சேரன்மகாதேவி கோட்ட கலால் அலுவலராகவும், சேரன்மகாதேவி கோட்ட கலால் அலுவலர் இசக்கி பாண்டி பாளை தாசில்தாராகவும், நெல்லை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆவுடையப்பன் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றங்கள் நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளன.