சின்னத்திரை நடிகர் தினேஷ், நெல்லை பணகுடியைச் சேர்ந்த கருணாநிதி என்பவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்பட்ட புகாரில் பணகுடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். எனினும், விசாரணைக்குப் பிறகு புகார் போலியானது எனத் தெரியவந்ததால், நடிகர் தினேஷ் இன்று விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.