வள்ளியூரில் உள்ள திரையரங்கு ஒன்றில், யாசகம் எடுக்கும் ஒருவருக்கு டிக்கெட் கொடுக்க ஊழியர் மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை படம் பார்த்தபோது பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக ஊழியர் காரணம் கூறினார். ஆனால், உடையை வைத்து டிக்கெட் மறுப்பதாக பொதுமக்களில் ஒருவர் ஊழியருடன் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.