காவல்கிணறு காமராஜர் சிலை அருகே இன்று ஒரு ராட்சத கிரேன் பழுதடைந்து நின்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பழுதடைந்த கிரேன் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கிரேன் அகற்றப்பட்ட பிறகு போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.